புத்தாண்டில் பூரிப்போம் கவிதைகள் பதிவு

புத்தாண்டில் பூரிப்போம் கவிதைகள் பதிவு

இல.சைலபதி வாசித்தளித்த கவிதை

 
புத்தாண்டில் பூரிப்ப்போம்

கொண்டாட்டங்கள் கொடிகட்டிப்பறந்த
இரண்டு தினங்களைக் கடந்து
நாளை வேலை நாள்

பரபரப்பு,பறக்கும்வேகத்தில் பயணம்
என எல்லாமே மாறிப்போகும்

வாழ்த்துகளும்
குவிந்த குறுஞ்செய்திகளும்
உலர்ந்து போவதற்கு முன்பே
குறுக்கிடலாம் வாழ்வின் நிஜங்கள்

கடந்த காலங்கள் சொல்லும்
என் தன் வரலாறு
நினைவுப்படுத்தும் -
முதுகுப்படிக்கட்டில் ஏறி
சிம்மாசனம் சேர்ந்தவர்களுக்கு
எதிரான என் கலகக் குரல்
ஓசையின்றி ஒலித்ததை

கேட்டு வாங்கியோ
அல்லது
வந்து சேர்ந்ததுவோ ஆன
சாமி படம்போட்ட
நாட்காட்டியில் நாட்கள் தீர்ந்து போன பின்பு
தூக்கியெறிய மனம் இன்றி
பரணில் சேர்த்த
பழைமை வாசனையாய்
கொண்டாட்ட நினைவுகள்

மாற்றங்களை மனதில் வைத்துதான்
கொண்டாட்டங்கள்

மனமோ, சமூகமோ
மாற்றங்களற்றதாக
மாறிபோனால் - கொண்டாட்டங்களோ
நிரந்தர வெளிச்சம் தேடியவனுக்கு
பட்டாசு வெளிச்சத்தை
பரிசளித்தது போலப்போகும்

ஆனாலும்
இன்று நண்பன்கொண்டு தந்த
நாட்காடியைக்கண்டு வியந்தபடியே
மனைவியிடம் கூறினேன்
"பாருடி இந்த வருஷம் பெருமாளே வந்திட்டார் வீட்டிற்கு"
என்று பூரித்துப்போனேன் இயல்பாக ....

0 Response to "புத்தாண்டில் பூரிப்போம் கவிதைகள் பதிவு"

Post a Comment